விளையாட்டு

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

Published On 2024-12-07 22:43 IST   |   Update On 2024-12-07 22:43:00 IST
  • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை அன்மோல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

கவுகாத்தி:

கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், சக வீராங்கனை மான்சி சிங்குடன் மோதினார்.

இதில் அன்மோல் கர்ப் 21-19, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் 13-21, 21-14, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் கெங் ஷு லியாங்-வாங் டிங் கெ ஜோடியை 21-14, 21-14 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

Tags:    

Similar News