செய்திகள்
டிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ்க்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ். #TNPL2018 #KVvMP
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடு வருகின்றன. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி ரோகித் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.
அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி ரோகித் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.