என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மஞ்சள்பரப்பு பகுதியில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டெருமைகள்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தெடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பழனிமலை பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் காப்பி பயிரிடுதல் பிரதானமாக உள்ளது.
காப்பிக்கு ஊடு பயிராக மலைவாழை, ஆரஞ்சு, பட்டர்புரூட், சவ்சவ், பீன்ஸ், பலா, ஏலம், எலு மிச்சை, ஜாதிகாய், பட்டை, மிளகு போன்ற இதர பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது எங்கு பார்த்தாலும் காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
பெரும்பாறை, தாண்டிக் குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பரையூர், வாழைகரி, வடகரைபாறை, ஊத்து, மங்களம்கொம்பு, கொங்கப்பட்டி, பெரியூர், மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பாச்சலூர் போன்ற கிராமங்களில் காட்டெருமைகளின் அட்டகாசத்தினால் பயிர்கள் நாசமாகி விடுகின்றன.
நேற்று முன்தினம் மஞ்சள்பரப்பு அருகே ஒரு தோட்டத்தில் காட்டெருமைகள் புகுந்து காப்பி, மிளகு, எலுமிச்சை போன்ற பயிர்களை வேரோடு சாய்த்தது. எனவே அந்த பகுதியில் சுற்றி வரும் காட்டெருமைகளை தோட்டத்திற்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்