வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்- சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்

கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்- சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப், கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரியா உடன் பலப்பரீட்சை நடத்தினார். கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மரியா சக்காரியா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

கோகோ காப் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் கோகோ காப் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பின் நடந்த இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com