பேராவூரணி அருகே ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலய ஆண்டு பெருவிழா

பேராவூரணி ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலய தேர்பவனி கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.
புனித அன்னாள்
புனித அன்னாள்
Published on

பேராவூரணி அருகே ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 17-ந்தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் திருப்பலி நடைபெற்றது. ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com