ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம்

அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆபத்து நேரும் போது சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஆபத்திலிருந்து அனுமன் நிச்சயம் நம்மை காப்பார்.
ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம்
Published on

ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே

அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே

ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ

தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!    

- ஹனுமத் ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.

X

Maalai Malar
www.maalaimalar.com