கடையம் அருகே விதவைப்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

விதவைப்பெண்ணை திருமணம் செய்த வாலிபரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம் அருகே விதவைப்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
Published on

கடையம்:

கடையம் அருகேயுள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (வயது 19). பொக்லைன் டிரைவர். இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 5 வயதில் ஒரு மகன் உள்ளான். பாரதிராஜாவுக்கும், அந்த பெண்ணுக்கும் 6 வயது வித்தியாசம் இருந்தது. அந்த பெண் பாரதி ராஜாவை விட மூத்தவர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜா அந்த பெண்ணை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இது பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் பாரதிராஜாவை கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாரதிராஜா சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாரதிராஜா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com