வேதாரண்யம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை- தந்தை கைது

வேதாரண்யம் அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமம் கோவில்குத்தகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது78). இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நாகராஜனுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது முதல் மகன் கார்த்திகேயன். 2-வது மகன் முருகையன்(42).

கூலித்தொழிலாளியான முருகையனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு இவர் மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு திண்ணையில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த முருகையன் என் தாய் தூங்கிய இடத்தில் யார் இந்த மோட்டாரை வைத்தது என கேட்டார்.

பின்னர் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து தனது தந்தை நாகராஜனை தாக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாகராஜன் மரக்கட்டையால் தனது மகன் முருகையனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com