காங்கயம் அருகே தொழிலாளியை கொன்ற வட மாநில வாலிபர் கைது

காங்கயம் அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காங்கயம் அருகே தொழிலாளியை கொன்ற வட மாநில வாலிபர் கைது
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக் கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.

இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சந்தோஷ் நாயக்கை அவருடன் வேலை பார்த்து வரும் பிஜூ ஹெம்ப்ரம் (25) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதால் அங்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் உஷார்படுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையில் போலீசார் சோதனை செய்த போது கேரளாவில் இருந்து ஒடிசா செல்லும் டன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டி பாத் ரூமில் பதுங்கி இருந்த பிஜூ ஹெம்ப்ரம் கைது செய்யப்பட்டார்.

அவர் காங்கயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com