

கொல்கத்தா:
தேச பாதுகாப்புக்காக, 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதையடுத்து, இந்திய சமூக ஊடக பயனர்களின் பார்வை, இந்திய சமூக ஊடக செயலிகளின் பக்கம் திரும்பியுள்ளது.
‘ஷேர்சாட்’ என்ற இந்திய சமூக ஊடக செயலியை மணிக்கு 5 லட்சம்பேர் வீதம் பதிவிறக்கம் செய்யத்தொடங்கினர். நேற்றைய நிலவரப்படி, 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த அபரிமிதமான ஆதரவு, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ‘ஷேர்சாட்’ தலைமை நிர்வாகி பரித் அசான் தெரிவித்தார். 15 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த செயலியை 15 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.