சேத்தூர் அருகே சாஸ்தா கோவில் அணையில் அதிகாரி ஆய்வு

புரெவி புயல் காரணமாக சாஸ்தா கோவில் அணையை ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாஸ்தா கோவில் அணையில் அதிகாரி ஆய்வு
சாஸ்தா கோவில் அணையில் அதிகாரி ஆய்வு
Published on

தளவாய்புரம்:

சேத்தூர் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அணையில் பாதி அளவு நீர் இருப்பு உள்ளது.

புரெவி புயல் காரணமாக சாஸ்தா கோவில் அணையை நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஜான்சி அனிதா, ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதர், சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு உள்பட பலர் உடன் சென்றனர். அணையின் நீர் வரத்து, தற்போது அணையில் நீர் இருப்பு பற்றி ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com