இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் - திலிப் வெங்சர்கார்

இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை என திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதும் ஐ.பி.எல். மீது தனது கவனத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறது. கிரிக்கெட் வாரியம் தனது மனதில் வைத்திருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் நிலை என்ன? தொற்று நோய் கால கட்டத்தால் பல திறமையான நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களது திறமையை வெளிப்படுத்தவும், தேசிய அணியில் உரிமை கோரவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தரமான வீரர்களை உள்ளூர் போட்டிகளில் இருந்துதான் பெறுவீர்கள்.இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை. இரானி கோப்பை மற்றும் துலீப் டிராபி போட்டியை உயிர் பாதுகாப்பான சூழலில் (கொரோனா காரணமாக) விளையாடுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. இப்போட்டிகளை கர்நாடகாவில் நடத்தலாம்.

கடந்த சீசனில் மு‌ஷடாக் அலி மற்றும் விஜ் ஹசாரே டிராபி மட்டுமே நடந்தது. ஆனால் டெஸ்ட் போட்டி டிராபி நடத்தவில்லை. தேசிய அணியில் ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்கு மாற்று வீரர் தேர்வு செய்ய வேண்டுமென்றால் அவரின் வடிவம் மற்றும் தகுதியை தீர்மானிக்க உங்கள் அளவு கோல் என்னவாக இருக்கும்? அதற்காக நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com