காதல் திருமணம் கசந்தது- மனைவி போலீசில் புகார் கொடுத்ததால், வாலிபர் தற்கொலை

ராஜபாளையம் அருகே காதல் திருமணம் கசந்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுதால் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் கசந்தது- மனைவி போலீசில் புகார் கொடுத்ததால், வாலிபர் தற்கொலை
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் சரகத்துக்குட்பட்ட குடல்குடி நத்தத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (18)என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது. பின்னர் இருவரும் மதுரையில் குடியேறினர். இருவரது குடும்பத்தினரும் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

திருமணம் செய்து சில நாட்களிலேயே காதல் கசந்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் விரக்தியுடனே இருந்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிரிந்து அவர்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.

காளீஸ்வரி குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவர் மீது சாத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் தினேசை அடிக்கடி அழைத்து விசாரணை நடத்தினர். மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் மேலும் விரக்தி அடைந்த தினேஷ் சம்பவத்தன்று ஊரின் அருகே உள்ள சிவலிங்காபுரம் குளக்கரை அய்யனார் கோவிலுக்கு சென்று வி‌ஷம் குடித்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்டது. மனைவி கொடுத்த புகாரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com