வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் பட்டியலினை உடனடியாக வெளியிட வேண்டும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு ஏற்பளிக்கப்பட்டதை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com