புதுச்சேரி காரைக்கால் மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் பலி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மருத்துவமனையில் அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் வழங்குதல், படுக்கைகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று மாலை ஐந்து மணியில் இருந்து இன்று மாலை ஐந்து மணிவரை அடுத்தடுத்து 13 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை உயிரிழப்பு குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com