பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் பலி
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வினித் (28). கூலி தொழிலாளி.

இவர் தனது நண்பர்கள் சூளேஸ்வரன்பட்டி ஜெய்கணேஷ் (24), ஜமீன் கோட்டாம்பட்டி சரவணன் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பொள்ளாச்சி - கோட்டூர் சாலையில் சூளேஸ்வரன் பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் வினித் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெய் கணேஷ், சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி 2 பேரும் பலியானார்கள். மோட்டார் சைக்கிளில் மோதிய காரை ஓட்டி வந்தவர் சின்னம் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது. அவரிடம் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com