ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000 பேர் உண்ணாவிரதம்

ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000 பேர் உண்ணாவிரதம்
Published on

சோழிங்கநல்லூர்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரம் வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இப்பகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத் தில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அப்போது முதலே அரசு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வீடுகளை அகற்ற முற்பட்டனர்.

இந்த மாதத்திற்குள்ளாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து விட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த பொங்கலை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.

அரசு தங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கருப்பு உடை அணிந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை உள்ள நிலையில் தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com