

ஐதராபாத், போபால், வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வெளியானது. ரூபாய் நோட்டுகள் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடும் அவதியடைந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போபால் நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரூபாய் நோட்டுகள் அளிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏ.டி.எம் குறித்த புகாரையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாரணாசி, ஐதராபாத் நகரங்களில் கடந்த பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக பலர் புகாரளித்துள்ளனர்.