ஜெயங்கொண்டம் அருகே மணல் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே மணல் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்
Published on

ஆண்டிமடம்:

ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகே விஏஓ பால சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கீழமைக் கேல் பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்ச் அருகே செல்லும்போது எவ்வித அனுமதி இன்றி மணல் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி கேட்ட போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து விஏஓ பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் சாத்தம்பாடி விஏஓ வீரபாண்டியன் செங்குழி பறனேரி ஓடையில் ஜேசிபி வைத்து டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்த போது மறித்து விக்கிரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குபதிந்து செட்டிதிருக்கோணத்தை சேர்ந்த வன்னிய ராஜன்(41), டிராக்டர் டிரைவர் கும்பகோணம் குருங்குடியை சேர்ந்த பழனி செல்வம்(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார். மேலும் ஜேசிபி எந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com