

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் என்ஜினீயர், இந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டால், அதன்பின் வாய்ப்பே கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா வார்னர் மற்றும் ஸ்மித் என்ற மிகப்பெரிய வீரர்களை இழந்திருக்கிறது. மிகப்பெரிய இரு வீரர்களை ஆடும் லெவனில் இழக்கும்போது, அந்த அணி மிகப்பெரிய அளவில் பலவீனமாகத்தான் இருக்கும்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதைவிட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இரு வீரர்கள் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலியா ஒரு சராசரியான அணிதான். இந்த வாய்ப்பை நாம் கட்டாயம் பறித்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகவும் சிறந்த ஆட்டத்தை விளையாடிகிட்டு இருக்கிறது.