

இந்திய அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையிலும் ரிசர்வ் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி எப்போதும் சிறந்த அணிதான், தரமான வீரர்களை தேடும் நிலை ஏற்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு தரமான வீரர்கள் பற்றி கவலையில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நான் முடிந்த வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆசைப்படுவேன். ஏனென்றால், வருங்கால இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்குதான் ஒளிந்து கிடக்கிறார்கள்.
நமது உளளூர் கிரிக்கெட் (domestic cricket) மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் சிறந்த திறமையுடைய வீரர்கள் பார்த்து வருகிறோம். அவர்களை நானும், எனது குழுவில் உள்ளவர்களும் தவறவிட விரும்பமாட்டோம். நாங்கள் பார்த்த போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு ஒன்றன்பின் ஒன்று என்ற அடிப்படையில் தயார் செய்து வைப்போம்.