தந்தையின் விருப்பப்படி தான் திருமணம் செய்தேன் - காட்டுவெட்டி குருவின் மகள்

தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். #KaduvettiGuru #Daughter #Marriage
தந்தையின் விருப்பப்படி தான் திருமணம் செய்தேன் - காட்டுவெட்டி குருவின் மகள்
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com