பர்கூரில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பர்கூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
பர்கூரில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி  மாவட்டம், பர்கூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் பர்கூர் கொங்கன் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடிகொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சந்திரசேகர்(37), கந்திலி சுந்திரவேல் (27), பத்தலப்பள்ளி சிவாஜி(42) இவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com