சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
Published on

அண்ணாமலைநகர்:

சிதம்பரம் நகரின் எல்லையில் புகழ்பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 மாதத்திற்கு ஒருமுறை உண்டியலை திறந்து, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கோவில் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் கோவிலில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 7 லட்சத்து ஆயிரத்து 533 ரூபாய் மற்றும் 52 கிராம் தங்கம், 51 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், ஆய்வாளர் ஜெயச்சித்ரா உள்பட பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com