போயிங் விமானத்தில் தீ - உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

டெல்லியில் விமான நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த போயிங் விமானத்தில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. #Boeing777CaughtFired
போயிங் விமானத்தில் தீ - உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

புது டெல்லி:

டெல்லி விமானநிலையத்தில் நேற்றிரவு டெல்லியில் இருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ செல்ல ஓடுதளத்தில் போயிங் 777 விமானம் நின்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்த ஏசியில் பழுதடைந்துள்ளது.

ஏசியை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக பின்பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டனர்.

சிறிது நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்தபோது பயணிகள், விமானிகள் என யாரும் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Boeing777CaughtFired  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com