அன்னவாசல் அருகே முதியவர் தற்கொலை

அன்னவாசல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தற்கொலை
முதியவர் தற்கொலை
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 60). இவர் அன்னவாசல் கோல்டன் நகரில் வசித்து வந்தார். இவருக்கும், இவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் அன்னவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள தைலமரக்காட்டில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில் மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அன்னவாசல் போலீசார், சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததாக, தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com