காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி

காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறினார். #ValentineDay
காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி
Published on

ஓசூர்:

ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-

நடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10 ரூபாயில் இருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டு, ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒரு ரோஜா 16 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #ValentineDay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com