பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- வடமாநில வாலிபர் கைது

பல்லடத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- வடமாநில வாலிபர் கைது
Published on

பல்லடம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணநாயக் (வயது32). இவரது மனைவி காமினி நாயக் (25). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பல்லடம் சின்னூர் பிரிவில் உள்ள வாடகை வீட்டில் தங்கிஅருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கிருஷ்ணநாயக்யை பிடித்து விசாரணை நடத்தியதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 18 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கிருஷ்ணநாயக்யையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com