குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்
குழந்தைகள் விளையாடவும், படிக்கவும், ஓய்வெடுக்கவும் சரியாக நேரம் நிர்ணயித்து பின்பற்ற வைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் உற்சாகமாக செயல்படுவார்கள்.
எப்போதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொன்னால், அவர்கள் ஆர்வப்பட மாட்டார்கள்.
உங்களின் வற்புறுத்தலால் படித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகள் சோர்ந்து விடுவார்கள்.
குழந்தைகள் விளையாடவும், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யவும் நேரம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் குறிப்பிட்ட நேரம் படித்தால், அதைத் தொடர்ந்து சிறிது நேரம் இடைவெளி விட வேண்டும்.
உதாரணமாக 25 நிமிடங்கள் படித்தால் 5 நிமிடம் இடை வேளை. இது பொமடேரோ டெக்னிக்' எனப்படுகிறது. இந்த நுட்பமானது குழந்தைகளின் கவனத்தை அதிகரித்து, அவர்களது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
குழந்தைகள் சிறந்த மதிப்பெண்களைப் பெற ரொம்ப நேரம் படிக்க கட்டாயப்படுத்த வேண்டாம். அவ்வப்போது குறுகிய இடைவெளிவிட்டு படிக்க ஊக்குவியுங்கள்.
முழு புத்தகத்தையும் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப படிப்பதை விட, சிறு குறிப்புகள் எடுத்துப் படிப்பது எளிதாக இருக்கும்.
மேலும், புரிந்து படிப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
பாடத்தை ஏன், எதற்கு, எப்படி என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களாகப் படித்தால் எளிதாக மனதில் பதியும்.