சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது.
சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது. சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
இந்த சாமை அரிசியை பயன்படுத்தி ஒரு இனிப்பான ரெசிப்பிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். சாமை அரிசி, கல்கண்டு வைத்து சாமை கல்கண்டு சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். சாமை அரிசியையும், பயத்தம் பருப்பையும் தண்ணீரில் களைந்து, குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேக விடவும்.
கல்கண்டை மிக்சியில் பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையை வறுக்கவும்.
வேக வைத்த சாமை அரிசியில் தேவையான அளவு நெய், கல்கண்டு தூள், முந்திரிப் பருப்பு. திராட்சை சேர்த்து கிளறி, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்து வேகவிட்டால் இன்னும் சுவை கூடும்.