உடலில் வாத பித்த கபத்தை சமன் செய்கிறது.இருமல் காமாலை புண்கள், வயிற்று வாயு என ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது.
விதையை நீக்கி விட்டு மேலே உள்ள தோலை பொடி செய்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது.
சோற்றுக்கற்றாழை சாரில் ஊறவைத்து உலர வைத்து, பொடி செய்து சாப்பிடலாம்.
சுத்தம் செய்த கடுக்காய் தோலை இரண்டு மிளகின் அளவு சாப்பிட ஜீரணம் நன்றாகி வயிற்றில் உள்ள வாயு வெளியேறி உடல் உறுதி பெறும்.
கால் ஸ்பூன் முதல் 1/2 ஸ்பூன் வரை தினமும் இரவு உணவிற்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிட காலையில் மலச்சிக்கல் இல்லாமல் மலம் வெளியேறும்.
கடுக்காய் பொடியை தேன் கலந்து சாப்பிட சளியும் நெய் கலந்து சாப்பிட மூலமும் குணமாகும்.
பல் விளக்குவதற்கு, ஆறாத புண்களை ஆற்றுவதற்கு, பிறப்புறுப்பில் ஏற்படும் நாற்றங்களை சரி செய்வதற்கு வயிறு வீக்கம், காமாலையை குணமாக்குவதற்கு என நிறைய பலன்கள் உண்டு
கடுக்காயை ஊறுகாயாக சாப்பிட ஜீரண கோளாறு கை கால் வலிகள் முழுவதுமாக நீங்கும்.