‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை - ஒரு கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 சோள மாவு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 2 பல் வெண்ணெய் - சிறிதளவு காய்ச்சிய பால் - அரை டம்ளர் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்.
தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். இப்போது மேத்தி கீரை சூப் ரெடி.