உங்களுக்கான சமையல் டிப்ஸ் இதோ... ட்ரை பண்ணி பாருங்க...
தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்தால் ருசியாக இருக்கும். உடலுக்கும் நன்மை பயக்கும்.
ஆம்லெட் செய்யும் போது கொஞ்சம் வெங்காயத்துடன் தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை வராது. ருசியும் கூடும்.
புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. நன்கு கழுவி மின் விசிறியில் காயவைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் போதும். ஒரு வாரம் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசிறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.
கூட்டு, பொரியலுக்கு தேங்காய் துருவலுக்கு மாற்றாக புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் போதும். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.