நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் 20 நிமிடத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்து கொண்டு பயன்படுத்த வேண்டும்
உறக்கமின்மை
இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
பார்வை குறைபாடுகள்
செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும்.
கூன் விழும் அபாயம்
நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும்போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகுவலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும் இதை சரி செய்வது கடினம்.
காது கேட்கும் திறன் இழப்பு
சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன்படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும்.
சில டிப்ஸ்
ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை குறைக்க இரவில் தூங்கும் போது அதனை உங்களிடமிருந்து விலக்கி வைக்க பழகுங்கள்.
ஸ்மார்ட்போன் பழக்கத்தை குறைக்க இணையத்தை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் முகத்தில் தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.
குடும்பம், புத்தகம் வாசிப்பு, சினிமா, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மாற்றம் செய்து கொள்வது சிறந்தது.