மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும்.
சாப்பிடவேண்டிய பழங்கள்
பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான பெர்ரி, வாழைப்பழங்கள், தர்பூசணிகள், பப்பாளிகள், ஆப்பிள்கள், அத்திப்பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.
காய்கறிகள்
வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. இதற்கு ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலிஃபிளவர் மாதவிடாய் வலியைக் குறைக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
இது மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும். முழு தானியங்கள்,பீன்ஸ்,நட்ஸ்,விதைகள்.
கொழுப்பு மீன்
கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். சால்மன் மீன், சூரை மீன், மத்தி மீன்கள், கானாங்கெளுத்தி இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.