நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
'கதாநாயகன்' திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து 'சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
இவர் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பங்கேற்கும் போது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் எந்த உண்மையும் இல்லை. நான் எந்த ஒரு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
அதுல்யா ரவி அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் செய்து அதை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.