இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி தரும். மேலும் உடலுக்கு தேவையான B காம்ப்ளக்ஸ் இதில் நிறைந்துள்ளது.
கெட்டியான பால் - அரை லிட்டர், இளநீர் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப், தேங்காய் பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, முந்திரி - 10, நெய் - ஒரு டீஸ்பூன்.
சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும். மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.