கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரியாமணி.
இவர் 2006-ம் ஆண்டு 'பருத்திவீரன்' என்ற தமிழ் திரைப்படத்தில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவர் விஜயின் ஜனநாயகன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் 'குட் வைஃப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவரது புகைபடங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.