search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
    • புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.

    தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

     


    அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும். 

    • 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் பயன்பெற முடியும்.
    • 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா வழங்கி வருகிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 5ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பிரீபெயிட் பயனர்கள் பயன்பெற முடியும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 13 முறை 10 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் முழு பயன்களை பெற பயனர்கள் பிரீபெயிடில் இருந்து போஸ்ட்பெயிடுக்கோ அல்லது நம்பரை செயலிழக்க செய்யவோ, ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் சலுகையை மாற்றவோ வேண்டாம் என வி தெரிவித்துள்ளது.

     


    வி கியாரண்டி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த சலுகையை பெறும் பட்சத்தில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா 10 ஜி.பி. வீதம் 13 தவணைகளில் வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையை பெற பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 239 துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் உள்ள பிரீபெயிட் சலுகையை பயன்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் இதே சலுகையை தொடர்ச்சியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை மே 25 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    சலுகையில் பயன்பெறுவது எப்படி?

    - பயனர்கள் வி நெட்வொர்க்கில் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும்.

    - ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு மற்றும் ஒரிசா டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்த பயனர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.

    - பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து 121199 அல்லது 199199# என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

    - முந்தைய ஆப்ஷனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யு.எஸ்.எஸ்.டி. எண்களை தொடர்ந்து வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

    - இவ்வாறு செய்த பிறகு, சலுகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.

    - கூடுதல் டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் *199# என்ற யு.எஸ்.எஸ்.டி. குறியீட்டை கொண்டு சரிபார்க்க முடியும்.

    • 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
    • 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது.

    ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், இயர்பட்ஸ் என மின்னணு சாதனங்கள் சந்தை உலகளவில் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை மூலம் அறிவிக்கும் அமைப்பு தான் சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.).

    ஒவ்வொரு சாதனமும் எந்த அளவுக்கு விற்பனையாகின்றன, அவற்றின் விலை எப்படி இருக்கிறது, பயனர்கள் அதை வாங்கும் விதம் என மின்னணு சாதனங்கள் விற்பனை குறித்த ஒவ்வொரு விவரமும், ஐ.டி.சி. வெளியிடும் அறிக்கையில் துல்லியமாக இடம்பெற்று இருக்கும்.

    அந்த வரிசையில், ஐ.டி.சி. சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் விற்பனை மற்றும் அவற்றின் விலை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், உலகளவில் அணிக்கூடிய சாதனங்கள் (Wearables) விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

     


    ஒட்டுமொத்தத்தில் அணியக்கூடிய சாதனங்களின் சராசரி விற்பனை விலை 2024 ஆண்டின் முதல் காலாண்டில் 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது. இந்த விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு ஆகும். ஆன்லைனில் அதிகப்படியான ஸ்டாக் இருப்பு மற்றும் குறைந்தளவு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதே விலை குறைப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

    ஸ்மார்ட்வாட்ச்களின் சராசரி விற்பனை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.24 டாலர்களில் இருந்து 20.65 டாலர்களாக சரிந்துள்ளது. இதேபோன்று மேம்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் பங்கு 2.0 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    ஐ.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் போட், நாய்ஸ், பயர்-போல்ட், பௌல்ட் மற்றும் ஒப்போ உள்ளிட்டவை முன்னணி இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டும் இதே நிறுவனங்கள் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X போல்டு 3 ப்ரோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வரவிருக்கிறது.

    புதிய விவோ X போல்டு 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், செய்ஸ் பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சீனாவில் விவோ X போல்டு 3 ப்ரோ மாடலின் விலை CNY 9,999 இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் இந்திய விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.
    • எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினியை கட்டுப்படுத்தலாம்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

    இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

    அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

    "எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

    இம்மாத துவக்கத்தில் சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர்.
    • பல பில்லியன் டாலர்கள் இழக்கும் சூழல் உருவானது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி நிறுவனம் கூகுள். உலகளவில் ஏராளமான பயனர்கள் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் சார்ந்து கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு கூகுள் வழங்கி வரும் ஸ்டோரேஜ் சார்ந்த சேவை தான்- கூகுள் கிளவுட்.

    கூகுள் கிளவுட் சேவையை கொண்டு பயனர்கள் தங்களின் மிகமுக்கிய தரவுகள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலம். தெரியாத்தனமாக கிளவுட் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர். இதே போன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இந்த சம்பவத்தில் ஓய்வூதிய நிதி சேவையை வழங்கி வரும் யூனிசூப்பர் நிறுவன பயனர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேரின் ஓய்வூதிய நிதி இருப்பு கொண்ட விவரங்கள் தவறுதலாக கூகுள் கிளவுட் சர்வெர்களில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இதை கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

    மேலும், விவரங்கள் தெரியாமல் அவிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவன பயனர்களுக்கு சொந்தமான பல பில்லியன் டாலர்கள் இருப்பு கொண்ட அக்கவுண்ட்கள் பாதிக்கப்பட்டன.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வூதிய நிதி நிறுவனம் யூனிசூப்பர். இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களால் தங்களது ஓய்வூதியை நிதி சார்ந்த அக்கவுண்டை ஒருவார காலத்திற்கு இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் பயனர்கள் ஓய்வூதிய நிதி நிலவரத்தை பார்க்க முடியாமலும், சிலரது அக்கவுண்டில் பணம் குறைந்து இருப்பதுமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

    ஓய்வூதிய நிதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக யூனிசூப்பர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை யூனிசூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் சுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவனம் தனது தரவுகளை கூகுள் கிளவுட் மட்டுமின்றி மேலும், சில நிறுவனங்களின் சர்வெர்களில் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினையின் பாதிப்புகள் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

    இதுதவிர கூகுள் கிளவுட் தரப்பில் இதுபோன்ற பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • அன்லிமிடெட் டேட்டா, ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ சலுகை "அல்டிமேட் ஸ்டிரீமிங் பிளான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெயிட் சலுகை ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாதம் ரூ. 888 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    அதன்படி இந்த சலுகையில் நெட்ப்ளிக்ஸ் (பேசிக்), பிரைம் வீடியோ (லைட்), ஜியோசினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 பிரீமியம், சன் நெக்ஸ்ட், ஹோய்சொய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, இரோஸ் நௌ, லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரோமீ, டாகுபே, எபிகான் மற்றும் இடிவி வின் என 15-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    மேலும், இந்த சலுகையில் ஐ.பி.எல். "தன் தனா தன்" பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு 50 நாட்கள் வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. எனினும், ஐ.பி.எல். சலுகை மே 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.


     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.

    ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900

    புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900

    11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900

    13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 

    • 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
    • மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.

    2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.

    அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

    ஐபோன் 15

    ஐபோன் 15 ப்ரோ

    ஐபோன் 14

    கேலக்ஸி S24 அல்ட்ரா

    கேலக்ஸி A15 5ஜி

    கேலக்ஸி A54

    ஐபோன் 15 பிளஸ்

    கேலக்ஸி S24

    கேலக்ஸி A34





    ×