வங்கதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா

வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா
Published on

வாஷிங்டன்:

வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல் முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் அங்கு பொதுத் தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13-வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

இதில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி, அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன்பி கட்சிக்கும், அக்கட்சி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com