2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: பணிக்குழுவை அமைத்தார் டொனால்டு டிரம்ப்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: பணிக்குழுவை அமைத்தார் டொனால்டு டிரம்ப்
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

"பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com