

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.
தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெற்றோர் தெறித்து ஓடும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலையில், கப்பலில் இருந்து குதித்தவர்களையும் சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.