இந்தியா உடன் வரிவிதிப்பு ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்

பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளார்.வரி தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியா உடன்  வரிவிதிப்பு ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2ஆவது முறையாக பதிவி ஏற்றதும், பரஸ்பர வரி விதிப்பை நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2ஆம் தேதி இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது. அவரது நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் இந்த வரி விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் ஏற்படும் என நினைக்கிறேன்.

இந்திய பிரதமர் மோடி இங்கே (அமெரிக்கா) வந்திருந்தார். ஒப்பந்தம் ஏற்பட அவர்கள் விரும்புகிறார்கள்" எனப் பதில் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரபஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தாலும் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரிகளைத் தவிர 10 சதவீதம் என்ற அடிப்படை வரி நடைமுறையில்தான உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com