எப்ஸ்டீன் கோப்பு லீக் எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த பிரதமரின் தனி செயலர்

எப்ஸ்டீன் சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்படுகின்றன.அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கிலான பக்கம் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.
எப்ஸ்டீன் கோப்பு லீக் எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த பிரதமரின் தனி செயலர்
Published on

பிரடிஸ்லவா:

அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.

அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவின் தனிச்செயலராகவும், அறிவுரை வழங்குபவராகவும் இருந்தவர் மிரோஸ்லவ் லஜக். 2009ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் லஜக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் பிரதமரின் தனிச் செயலர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com