இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கிறது.சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல்
Published on

கீவ்:

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷியா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது.

இதுதொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை ரஷியா ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்தியாவின் நட்பு நாடு என கூறும் ரஷியா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com