ஜெர்மனி அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரோபோக்கள்

ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார்
ஜெர்மனி அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரோபோக்கள்
Published on

பீஜிங்:

கிரீன்லாந்து விவகாரத்தில் தனக்கு ஆதரவளிக்காத ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதலாக வரிகள் விதித்தை அடுத்து, பல்வேறு முன்னணி நாடுகள் சீனா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்களைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளார்.

முதல் முறையாக சீனா சென்றுள்ள அவர் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து உரையாடுகிறார். இரு நாடுகளிடையே சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

உலக அளவிலான மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகளை சீனாவின் ஈடுபாடின்றி முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட நெருக்கடிகள் மற்றும் போர்களைத் தீர்க்க சீனாவின் ஒத்துழைப்பு தேவை என ஜெர்மனி அதிபர் மெர்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெர்மன் அதிபர் மெர்ஸ் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் வரிசையாக நின்று நடனமாடி அசத்தின. மேலும் பாக்சிங் மற்றும் குங்பூ சண்டையிட்டுக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

ரோபோ அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்ட ஜெர்மன் அதிபர், அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com