அகமதாபாத் விமான விபத்து: அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத் விமான விபத்து: அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Published on

வாஷிங்டன்:

அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று. இந்தியாவுக்கு எந்தத் திறனிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது.

விமான விபத்து மிகவும் பயங்கரமானது. நான் ஏற்கனவே அவர்களிடம் (இந்தியா) சொல்லியிருக்கிறேன், நாம் என்ன செய்ய முடியும். இது ஒரு பெரிய நாடு, ஒரு வலிமையான நாடு, அவர்கள் அதைக் கையாளுவார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

விமான விபத்து குறித்து அதிபர் புதின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

மேலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்ட்னி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com