இம்ரான்கான் யூடியூப் சேனலுக்கு தடைவிதித்த இஸ்லாமாபாத் கோர்ட்

பாகிஸ்தானில் 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இம்ரான்கான் யூடியூப் சேனலுக்கு தடைவிதித்த இஸ்லாமாபாத் கோர்ட்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.

இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த சேனல்களை தடைசெய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

யூ டியூப் சேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com