நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு #NepalElection

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும்.தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு #NepalElection
Published on

காத்மண்டு:

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி பதவி ஏற்றார்.

அவரது பரிந்துரைப்படி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், 1,89,03,689 பேர் வாக்களிக்க உள்ளனர்.

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த சபையான கீழ் சபைக்கு 3,406 வேட்பாளர்களில் 165 உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மீதமுள்ள 110 இடங்களுக்கு 3,135 வேட்பாளர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 2-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. நேபாள எல்லையோரங்கள் கடந்த 2-ம் தேதி முதல் மூடப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com