காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்
Published on

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.

காசாவில் நடந்த போரின் போது இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை விற்றதாகவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவியதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே சமயம் காசாவில் உள்ள மக்களை தாக்குவதற்காக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு நாட்டிற்கு இடையேயான போரில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

முன்னதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது என்று குற்றம் சஷ்டி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com